யாழில் புத்தாண்டு தினத்தன்று கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.
கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தென்னை மரத்தில் ஏறிய போது, தென்னையில் கட்டப்பட்டிருந்த பொச்சு மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி தென்னையில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்து படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.