Saturday, August 29, 2026 1:10 pm
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தின் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 579 ஆக உள்ளது, அதே நேரத்தில் திபெத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சீனா கூறியதாக அந்நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் சனிக்கிழமை அதிகாலை செய்தி வெளியிட்டது.
திபெத்தில் சிக்கித் தவித்த 555 சுற்றுலாப் பயணிகளையும் 499 சீனக் குடியிருப்பாளர்களையும் மீட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில், நேபாளத்திலிருந்து பாயும் ஆறுகளில் இருந்து ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் , அவை வெள்ளத்தில் பலியானவர்கள் என நம்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திபெத்தின் கைலாஷ் மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்த பலர் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான இந்து பக்தர்கள் எல்லையில் காணாமல் போயுள்ளனர்.
இந்தத் திடீர்வெள்ளத்தினால் 2478 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

