Sunday, April 19, 2026 9:10 pm
பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விரைவு இரயில் மோதியதில் 23 வயதான ரஷ்யப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அஹங்கமவில் நடந்த இந்த சம்பவத்தின் போது அப்பெண் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்துகொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தபோது ரயில்வே கிராசிங்கின் சிக்னல் விளக்குகள் இயங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

