Tuesday, April 14, 2026 8:34 am
ஈரானின் தரை ,கடல் எல்லைகளின் பாதுகாப்பு குறித்து நாட்டிற்கு எந்தக் கடுமையான கவலையும் இல்லை என்று அந்நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான உள்துறை துணை அமைச்சர் அலி ஸெய்னிவந்த் திங்களன்று கூறினார்.
“நாட்டின் மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு , கடல் எல்லைகளில் எந்தக் கடுமையான கவலையும் இல்லை,” என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ள ஸெய்னிவந்த், தெஹ்ரானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
வடமேற்கு மற்றும் தென்கிழக்கு ஈரானில் நிறுவப்பட்டுள்ள இரண்டு இராணுவத் தலைமையகங்கள் மூலம் எல்லைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும், அவை எல்லைகளுக்கு மேலும் அப்பாலும் துல்லியமான, ஆழமான கட்டுப்பாட்டிற்காகப் படைகளைக் குவிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மக்களின் உயிர்களும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் ஈரானிய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்று கூறிய ஸெய்னிவந்த், மாகாணங்கள் முழுவதும் பொருட்கள் விநியோகம் அல்லது உள் நிர்வாகத்தில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றும் மேலும் கூறினார்.

