மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு இலங்கை மின்சார சபை பலமுறை தவறியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடையால் ஆறு முதல் ஏழு மணித்தியாலங்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது., இதன் விளைவாக சிறுதொழில்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் மின்சாரத்தையே பெரிதும் நம்பியுள்ளோம். எனவே, பெப்ரவரி 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை எமக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பை மதிப்பீடு செய்து நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குமாறு நாம் மின்சார சபையை வலியுறுத்துகிறோம். சட்டங்களின்படி, அத்தகைய இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்,” என்றார்.
Trending
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு
- 24 மணி நேர கடவுச்சீட்டு சேவை நிறுத்தம்
- ஊழலற்ற மக்களாட்சியை சுயேட்சை குழுவான மாம்பழச் சின்னம் வழங்கும்