மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு இலங்கை மின்சார சபை பலமுறை தவறியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடையால் ஆறு முதல் ஏழு மணித்தியாலங்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது., இதன் விளைவாக சிறுதொழில்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் மின்சாரத்தையே பெரிதும் நம்பியுள்ளோம். எனவே, பெப்ரவரி 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை எமக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பை மதிப்பீடு செய்து நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குமாறு நாம் மின்சார சபையை வலியுறுத்துகிறோம். சட்டங்களின்படி, அத்தகைய இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்,” என்றார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி