கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் அமரர் பாரதியின் நினைவு வணக்கக்கூட்டம் எதிர் வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு வீரகேசரி நாளிதழ் – வார இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெறும்.
தமிழ் – சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையை சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். .
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிரபிராந்திய ஆசிரியராக பணியாற்றினார்.
Trending
- ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டன
- இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் இங்கிலாந்து எச்சரிக்கை
- இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விஷேட அறிவித்தல்
- படப்பிடிப்புக்கு உகந்த நாடு – இலங்கை மோகன்லால்
- 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய நாயின் உரிமையாளர்
- தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
- பிரிட்டிஷ் F-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
- முனைவர் பட்ட சான்றிதழ் வர தாமதமாகலாம் – சபாநாயகர்