அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான தணிக்கை இன்றுவரை நடத்தப்படவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயம் மேலும் தெரிவிக்கையில்,
அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். அப்படியானால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஏன் இல்லை?
குறைந்தபட்சம் அரசு வாகனங்களின் எண்ணிக்கையை என்னிடம் சொல்ல முடியுமா? ஏன் என்றால் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
எங்கள் சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் அதிக அளவு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களுக்கு வாகனங்கள் இல்லை. “நாங்கள் மிகவும் எளிமையான முறையிலேயே சரிபார்த்தோம்.” என்றார்.
Trending
- எல்பிட்டியவில் எண்ணைக்கம்பத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- காணி விடுவிப்பு கோரிக்கை – ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
- கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்பு
- வேலணை மக்களிடம் மாட்டிய திருடர் குழு
- சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்