Friday, June 12, 2026 2:31 pm
நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றினால் இன்று (12) அதிகாலை நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டின் மீது பெரிய மரம் விழுந்ததில் , வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மரம் விழுந்த பின் மரத்தில் சிக்கிக்கொண்டு காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையைக்காக சேர்த்துள்ளதனை தொடர்ந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரத்தினால் வீட்டின் உடைமைகள் சேதம் அடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனினும் இதில் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாவலப்பிட்டிய பொலிஸாரால் தெரிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

