Tuesday, May 19, 2026 8:12 pm
இரத்மலானா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத தொலைக்காட்சி ,வானொலி ஒலிபரப்பு மையத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் நடத்திய இந்த சோதனையின் போது, மாலதீவு நாட்டவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மையம் அட்டிதியா பகுதியில் ஒரு பயண நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் பெறுவான்கள், செயற்கைக்கோள் தட்டுகள், கணினிகள், ஒரு ஸ்டார்லிங்க் அலகு மற்றும் பிற ஒலிபரப்பு உபகரணங்கள் உட்பட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சாதனங்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த மையம் ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக தொலைக்காட்சி , வானொலி ஆகியவற்றின் மூலம் சேவைகளை மறுவிநியோகம் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

