Thursday, January 22, 2026 4:36 pm
யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்திற்கு இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்தில் பாரம்பரிய யாழ்ப்பாண காலை உணவோடு அவர் தனது பயணத்தைத் தொடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தப் பயணத்தின்போது தொண்டமானாறு செல்வ சந்நிதி கோவிலுக்கும் எளிமையாக விஜயம் செய்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார்.


