Friday, January 16, 2026 2:38 pm
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் கிராமசேவகர் பிரிவு மற்றும் கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட திம்பிலி ஆகிய பகுதிகளிலுள்ள காணிகளிலிருந்து, குறித்த காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் குடியிருக்கின்ற காணிகள் மற்றும் மக்களால் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தும் காணிகள் உட்பட 62பேருடைய காணிகளுக்கே இவ்வாறு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்தால் அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிற்கு அப்பகுதிமக்களால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

இந்தச்சந்திப்பின் போது குறித்த பிரச்சினை தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டார்.

