Wednesday, January 14, 2026 10:32 am
தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த சத்தியாகிரகப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து தனது போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

