Monday, January 12, 2026 4:09 pm
2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமூகமாக புறப்பட்ட PSLV-C62 ரொக்கெட் எட்டு நிமிடங்களுக்குப் பின்னர், அதன் மூன்றாவது கட்டத்தில் ஒரு செயல்திறன் தொந்தரவை சந்தித்துள்ளது. இதனால் அது அதன் விமானப் பாதையிலிருந்து விலகிச் சென்றது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று திங்கட்கிழமை விண்ணில் ஏவ தயாராக இருந்த PSLV-C62 ரொக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட்டாகும். இந்த ரொக்கெட் மூலம் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பெயின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டது.
இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன.
இந்த நிலையில் PSLV-C62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3 ஆவது நிலையின் முடிவில் ஒரு கோளாறு ஏற்பட்டது. இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

