Thursday, January 8, 2026 10:27 am
இலங்கையில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்படுகின்றமையால் 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் வசித்து வரும் பொதுமக்கள் வெள்ளம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன்படி ,ஏதேனும் அனர்த்த நிலை ஏற்படுமாயின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

