Wednesday, January 7, 2026 1:17 pm
நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை ஏற்றிச் செல்வதற்காக வந்தபோதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளையும் ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.

