Wednesday, December 24, 2025 2:16 pm
சென்னை பெரம்பூரில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது 3250 சிறுபான்மையின குடும்பங்களுக்கு நலன் சார்ந்த உதவிகளும் , சிறுபான்மையின மாணவர்களுக்காக 14 கல்லூரி விடுதிகளில் உடற்பயிற்சி , நூலகம் மற்றும் விளையாட்டு கருவிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டது.
2.87 கோடியில் 44 தேவாலயங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை தனது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் , இந்த நாட்டின் குடிமக்களுக்கு அச்சத்தை வரவைக்கும் சர்வதிகார சக்திகளை எதிர்க்கும் திறன் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு துணையாக திமுகவும் , மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருப்பது போல மக்களும் தமக்கு துணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

