Thursday, December 18, 2025 3:59 pm
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று இடம்பெற்ற நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
இதன்படி , புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , இலங்கைக்கு எரிவாயு வழங்குவதற்கான டெண்டர் (Tender) , முந்தைய ஓமானி நிறுவனத்திற்குப் பதிலாக ஜியோகாஸ் டிரேடிங் எஸ்.ஏ.க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைசாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
“ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் முதல் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். எனவே , சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது போல் எரிவாயு பற்றாக்குறை இருக்காது” என்று அவர் கூறினார்.

