Friday, November 14, 2025 4:55 pm
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக வருகைதந்த தொல்.திருமாவளவனை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற “கார்த்திகை வாசம்” மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த விழாவிற்கு கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


