Monday, November 10, 2025 4:31 pm
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில், இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய, திருஞானம் ஜோன் குயின்ரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறப்பிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சடலம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர், இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலமானது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

