Friday, October 31, 2025 12:30 pm
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட, சாரதி இல்லாது இயங்கும் முதலாவது கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) ஆகியவற்றுடன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த சாரதி இல்லாது இயங்கும் தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கார் தயாரிக்கும் பணி ஆரம்பித்துள்ளதாகவும், பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகலான வீதியில் எப்படி இயங்கும்? வீதிகளின் குறுக்கே விலங்குகள் வந்தால் எப்படி இயங்கும்? வாகனங்களுக்கு வழிவிடுவது உட்பட பல்வேறு கட்ட சோதனை செய்து, அதற்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இந்த கார் முழுக்க தயார் செய்யப்பட்டுள்ளது.


