Wednesday, October 29, 2025 2:59 pm
காணி விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இன்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணியானது இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில் விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.
குறித்த இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

