மத்திய கிழக்கில் உள்ள மூன்று டுகளில் இருந்து திரும்பிய ஏழு இலங்கையர்கள் 18.6 மில்லியன் ரூபா மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
குவைத், துபாய் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து இருந்து மூன்று வெவ்வேறு விமான நிறுவனங்களில் திரும்பி வந்த இவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தல் பொருட்களை அறிவிக்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது.
BIA சுங்க வட்டாரங்களின்படி, அதிகாரிகள் ஒரு பிராண்டின் 620 அட்டைப் பெட்டிகளையும், 124,000 சிகரெட்டுகளைக் கொண்ட மற்றொரு பிராண்டின் சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர், அவற்றில் விற்பனை மற்றும் பயன்பாடு இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அனுராதபுரம், கெக்கிராவ, கஹவத்த , கொழும்பு ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்ட ஏழு ஆண் பயணிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சுங்க அதிகாரிகள் பொருட்களை பறிமுதல் செய்து, ஒவ்வொரு சந்தேக நபருக்கும் அபராதம் விதித்தனர்.