வெசாக் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலையின் துணை ஆணையர்நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து சிஐடி நடத்தி வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இவர் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியாலனுமதியளிக்கப்படாத கைதிகளை சட்டவிரோதமாக விடுவிக்க இந்த மன்னிப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தண்டனை பெற்ற வங்கியாளர் ஒருவர் ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.