யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
கருத்துரைகளையும், பரிசில்கள், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினரான வடமாகாண பண்பாட்டு அலகுகள் பிரிவு பிரதி பணிப்பாளர் வாகினி நிருபராஜ், யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணாளினி விஜயரத்தினம், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னைனாள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரும், பச்சிலைப்பள்ளியின் பிரதேச செயலருமான இ.த.ஜெயசீலன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.
இதில் சமூக சீர்திருத்த நாடகம் மற்றும் புராண நாடகங்களுக்காக சுப்பிரமணியம் சரவணபவன், நாடக எழுத்துரு, இயக்கம், நடிப்பு போற்றவற்றிற்க்காக கந்தசாமி கணேசலிங்கம் ஆகியோருக்கு கலைச்சாகரம் விருதும், நடாசா நவரத்தினம், கிருஸ்ணசாமுவேல் மனோரஞ்சன் ஆகியோருக்கு கலைமருது விருதும், திருமதி சொந்தியா ஜெயசுலக்சன், தேவதாஸ் ஜீடிற்டெனிஸ் ஆகியோருக்கு கலைக்கதிர் இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கு கலைஞர்கள், பொதுமக்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.