Monday, February 3, 2025 2:18 am
வடக்கு அவுஸ்திரேலியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள அதிகாரிகள் திங்களன்று மாநிலத்தின் வெப்பமண்டல வடக்கில் வசிப்பவர்கள் பல நாட்களாக பெய்த மழையைத் தொடர்ந்து மேலும் வெள்ளத்தை எதிர்பார்க்கலாம் என்று எச்சரித்தனர்.
மாநிலத் தலைநகரான பிரிஸ்பேனில் இருந்து வடக்கே 1,000 கிமீ தொலைவில் உள்ள டவுன்ஸ்வில்லி நகரத்திலிருந்தும், சுற்றியுள்ள நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு மூன்று நாட்களில் ஒரு மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நில அவசர சேவை (SES) ஞாயிற்றுக்கிழமை உதவிக்காக கிட்டத்தட்ட 400 அழைப்புகளைப் பெற்றதாகக் கூறியது.வடக்கு குயின்ஸ்லாந்தை பிரிஸ்பேனுடன் இணைக்கும் முக்கிய சாலையான புரூஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் டவுன்ஸ்வில்லிக்கு வடக்கே இடிந்து விழுந்து பல நகரங்களை துண்டித்துள்ளது.

