ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் [31] பாடகியும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சருமான அனா பார்பரா புர் புல்ட்ரினி, துருக்கியின் இஸ்தான்புல்லில் அழகை மெருகேற்றுவதற்கான காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்தார்.
அவர் தனது கணவர், பிரபல கலைஞர் எல்கர் சூயாவுடன், துசா மருத்துவமனையில் மார்பகப் பெருக்குதல், லிபோசக்ஷன் , ரைனோபிளாஸ்டிக்காக துருக்கிக்குச் சென்றார்.
புல்ட்ரினி துசா மருத்துவமனையுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், விளம்பரத்திற்காக அறுவை சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 90 நிமிட மருத்துவர்கள் முயற்சி செய்தும், இறுதியில் அவர் மரணமானார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அவரை மணந்த அவரது கணவர், அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளிலும் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சைக்கு முன்பு சாப்பிடக் கூடாது என்றாலும், அறுவை சிகிச்சைக்கு முன்பு அனா சாப்பிட்டதாகக் குறிப்பிட்டு, அவர் தயாராகவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வளவு விரைவாக அறுவை சிகிச்சை செய்ய எந்த அவசர மருத்துவ காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
Trending
- ஈரானின் மூன்று தளபதிகளை ஒரே நாளில் கொன்றது இஸ்ரேல்
- இந்து வழக்கப்படி ரஷ்ய வீரரின் இறுதிச் சடங்கு
- டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை சாதனை படைத்த இந்திய ஜோடி
- மொசாம்பிக் பாடகிக்கு எமனான அழகு சிகிச்சை
- ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வீழ்ச்சி
- ஈரானில் சிக்கியஇலங்கை , நேபாள மக்களை வெளியேற்ற இந்தியா உதவி
- ஒவ்வொரு நாளும் சர்வதேச யோகா தினமானால்………….
- 10,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்