நாட்டை டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைத்து, மூன்று புதிய டிஜிட்டல் தொடர்பாடல்கள் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘GovPay’ தளத்தை அறிமுகப்படுத்துதல், கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலிருந்து பிரதேச செயலக மட்டத்திற்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துதல் , வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இலங்கை தூதரகப் பணியகங்களில் மின்னணு முறையில் பெற அனுமதிக்கும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் (EBMD) வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் இன்று முதல் கிடைக்கும்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை