கிறிக்கெற்றில் பல சாதனைகள் செய்த முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மாஸ்டர்ஸ் , இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. மார்ச் 16 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணி தலைவராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குமார சங்ககரா, மேற்கிந்திய தீவு அணிக்கு பிரையன் லாரா, இங்கிலாந்து அணிக்கு இயான் மார்கன், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாண்டி ரோட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு