நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ் பட்லர் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா அறிமுக வீரர் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெஏகளை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது கப்டன் ரோகித் சர்மா 2 ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 , அக்சர் பட்டேல் 52 ஓட்டங்கள் அடித்தனர்.
சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். , இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.
Trending
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்
- அதி வேக வீதியில் குழந்தை செலுத்திய கார்
- கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை
- அமெரிக்க வரிகளால் கடுமையாகப் பாதிப்படைந்த சீன சிறு வணிகங்கள்
- மதுபோதையில் வாகனம் செலுத்திய 800 சாரதிகள் மீது வழக்கு
- முதன்முறையாக பெண்கள் குழு விண்வெளிக்கு பயணம்