‘சிசு சரியா’ பாடசாலை பஸ்ஸில் மிதி பலகையில் சென்ற மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி, நடத்துனர் ஆகிய இருவரின் கவனக்குறைவு, அலட்சியப் போக்கே விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, வடமேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் சம்பந்தப்பட்ட சாரதி, நடத்துனர் ஆகிய இருவரையும் தற்காலிக பனி நீக்கம் செய்துள்ளது.