மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் 237 பில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் 2022 இல் வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாஎன பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் மது அருந்துவதால் 15,000 பேரும், சிகரெட் பாவனையால் 20,000 பேரும் மரணமாகிறார்கள்.
இலங்கையில் தொற்றாத நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதற்கு மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையே முக்கிய காரணங்களாகும் என ADIC சுட்டிக்காட்டியுள்ளது.
2023 இல் 20% வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, மதுவின் நுகர்வு 8.3 மில்லியன் லீற்றர் மதுபானம் குறைந்துள்ளது, அதேவேளை வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சிகரெட் விற்பனை மூலம் வரி வருவாய் 7.7 பில்லியன், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என ADIC தெரிவித்துள்ளது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை