வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விடுதியின் உரிமையாளர், அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் இசைக்குழுவான டிஎன்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. அரங்கத்திற்குள் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் கூரை தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 18 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் பஞ்சே தோஷ்கோவ்ஸ்கி உறுதிப்படுத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஹிப்-ஹாப் இசைக்குழுவான டிஎன்கே-வின் உறுப்பினரான விளாடிமிர் பிளாசெவ்ஸ்கியும் ஒருவர், அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உடல்நிலை சீராக உள்ளது.
கிளப்பின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் ஹிருஸ்டிஜன் மிக்கோஸ்கி தனது திட்டமிடப்பட்ட மாண்டினீக்ரோ பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரகால முயற்சிகளை மேற்பார்வையிட கோகானிக்குச் சென்றார். நீதி அமைச்சர் இகோர் ஃபில்கோவ் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், இதுபோன்ற ஒரு துயரம் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.