போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக நடவடிக்கைகள், பிற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த ரூ. 4 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 88 நபர்களின் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்துக்கள், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 4,086,332,324.22 என்றும், அவை முக்கிய போதைப்பொருள் கும்பல் ,பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.