Friday, August 15, 2025 10:05 am
பொதுவான அரிசி பற்றாக்குறை இல்லை என்றும், ‘கீரி சம்பா’ வகை குறித்த தற்காலிக கவலை மட்டுமே என்றும் வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, கூறினார்.
பொலன்னறுவையில் சுமார் 85,000 மெட்ரிக் தொன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது, இது வெளியிடப்பட்டால் பற்றாக்குறையைக் குறைக்கும். தேவைப்பட்டால் ‘GR11’ என்ற மாற்று வகையை இறக்குமதி செய்வது பின்னர் பரிசீலிக்கப்படலாம்.
சிறுபோக சாகுபடி அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அரிசி விலையை ரூ. 230/கிலோவிற்குள் வைத்திருக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

