பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்,விடயம் சார்ந்த விசேட நிபுணத்துவம் கொண்ட 12 நிபுணர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
பேர வாவியை தூய்மையாக்குவதற்காக இதற்கு முன்னர் சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.பேர வாவியில் துர்நாற்றம் வீசுவதற்கும் நீரின் நிறமாற்றத்திற்கும் பாசிகள் அதிகரித்திருப்பதே காரணமென அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு விடயத்துடன் தொடர்புடைய நிபுணர் குழுவின் மூலம் விரைவாக வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமெனவும் அமைச்சர் அனுர கருணாதிலக்க மேலும் கூறினார்.
Trending
- டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்கும் செயற்றிட்டம்
- பாலியல் வன்கொடுமை குற்றம் சுமத்தப்பட்ட கனடிய வீரர்கள் விடுதலை
- உலகின் மிகச்சிறிய பாம்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது
- ட்ரம்பின் தடையால் திருநங்கை கேடட்டின் கனவு தடைப்பட்டது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
- ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் : பிரதமர் பதிலளிப்பு
- 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தம்
- இலங்கை, பிரான்ஸ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு கைச்சாத்து