பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ,4.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA) தெரிவித்துள்ளது.
ரவி, சட்லஜ் , செனாப் ஆகிய ஆறுகளில் அதிக நீர் மட்டத்தால் ஏற்பட்ட வெள்ளம் மாகாணம் முழுவதும் 4,500 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேதப்படுத்தியுள்ளது என மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம்
மீட்பு ,நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 2.45 மில்லியன் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 396 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சுமார் 1.9 மில்லியன் கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம்தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், ஜூன் 26 முதல் பருவகால மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 956 பேர் கொல்லப்பட்டுள்ளனர் , 1,060 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 8,400 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன, மேலும் 6,500 க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன
Trending
- வெளிநாட்டுக்குச் செல்கிறார் அனுர
- சிரிலியா-கார்ல்டன் பஸ் ஒப்பந்த விசாரணையை ஆரம்பித்தது சிஐடி
- 2026 ஆம் ஆண்டு பாடசாலை பரீட்சை அட்டவணை வெளியிடப்பட்டது
- மட்டக்களப்பு எம்பி ஞானமுத்து ஶ்ரீநேசன் விபத்தில் காயம்
- பாலியல் குற்றவாளிகு 10 வருட கடூழிய சிறை தண்டனை
- மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க 6 மணிநேரம் பயணம்
- ருமேனியாவுக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய விமானம்
- பாகிஸ்தானில் வெள்ளத்தில் 97 பேர் மரணம், 4.4 மில்லியன் மக்கள் பாதிப்பு