பாகிஸ்தானில் சஃபாரி பூங்காவில் உள்ள மதுபாலா ,மாலிகா என்ற இரண்டு பெண் யானைகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்காக, யுஸ்ரா அஸ்காரி தலைமையிலான இலங்கை கால்நடை நிபுணர்கள் குழு, 17 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை கராச்சிக்குச் செப்றது.
யானைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக, இந்தக் குழு யானைகளின் முழுமையான சுகாதார பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. சஃபாரி பூங்காவில் நடந்த ஒரு மாநாட்டின் போது, டாக்டர் பண்டாரா, யானைகள் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடுமையான நெறிமுறைகளின் கீழ் அவற்றின் சிகிச்சை தொடர்வதாகவும் கூறினார்.
“சிகிச்சையின் போது யானைகளுக்கு அருகில் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை,” என்று டாக்டர் பண்டாரா கூறினார், பூங்காவிற்கு வருபவர்கள் யானைகளை தூரத்திலிருந்து மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறினார். மதுபாலா மற்றும் மாலிகா இருவருக்கும் காசநோய் (TB) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் சிகிச்சை நீண்ட கால அடிப்படையில் தொடரும். டாக்டர் பண்டாராவின் கூற்றுப்படி, யானைகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படும்.