வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான சந்தைக்கு 50 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து, 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அவசரகால நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்கு மக்கள் கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்தது. பத்து பேர் மீட்கப்பட்டதாக தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பின் தலைவர் ஜுபைதர் உமர் சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் தேடுதல் மீட்பு நடவடிக்கையில் உள்ளூர் அதிகாரிகள், அவசரகால உதவியாளர்களுடன் ஒத்துழைத்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, வட-மத்திய நைஜீரியாவில் உள்ள நைஜர் மாநிலத்தில் சுமார் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 13 பேர் இறந்தனர் பலர் காணமல் போட்யினர்.
ஜூலை 29 அன்று, வடமேற்கு ஜிகாவா மாநிலத்தில் விவசாய வேலைகளில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற படகு நடுநீரில் கவிழ்ந்ததில் ஆறு சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.