ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனம், 1948 ஆம் ஆண்டு பிராந்திய ராணுவ விதிமுறைகளின் பத்தி-31 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை ராணுவ விவகாரத் துறையின் இணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.சவுத்ரி வெளியிட்டார்.
வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய தடகள வீரராக பரவலாகக் கருதப்படும் 27 வயதான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் மணிமகுடங்களில் ஒன்றாக இந்த சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா முதன்முதலில் ஆகஸ்ட் 26, 2016 அன்று இந்திய ராணுவத்தில் நைப் சுபேதராக சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகளாக, அவர் பதவி உயர்வு பெற்று, 2021 இல் சுபேதராகவும், 2024 இல் சுபேதர் மேஜராகவும் ஆனார்.
Trending
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு