Thursday, February 5, 2026 9:11 pm
அரிசோனாவில் துப்பாக்கிச் சூடு நநடத்தியவரை பிடிக்க முயன்ற அதிகாரிககுக்கு உதவச் சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலியானார்கள். அரிசோனா பொதுப் பாதுகாப்புத் துறை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானியும் அதில் இருந்த துணை மருத்துவராக இருந்த ஒரு துருப்பும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெல் 407 ஹெலிகொப்டர் இரவு 10:15 மணியளவில் ஃபிளாக்ஸ்டாஃப் அருகே விபத்துக்குள்ளானது, அதன் பின்னர் தீ விபத்து ஏற்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த ஹெலிகொப்டர் 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை என்றும், அவர் காவலில் வைக்கப்பட்டார்.

