தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை வழக்கில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் செந்தில் பாலாஜி , சமீபத்தில் சைவம் வைணவம் பேச்சால் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு மின்சாரத் துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுவசதி அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனம் மற்றும் காதி துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளார். நாளை திங்க்டகிழ்மை ( 28) மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் பதவியேற்பார்.