சாட்டில் நிலைகொண்டிருந்த பிரான்ஸ் துருப்புக்கள் முறையாக திரும்பப் பெறப்பட்டதைக் குறிக்கும் விழா சாட்டின் தலைநகரான என்’ஜமேனாவில் உள்ள அட்ஜி கோசே இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி கடந்த வாரம் அறிவித்தபடி, சாட்டில் பிரான்ஸின் இராணுவ பிரசன்னம் முடிவுக்கு வந்தது, நாட்டில் 120 ஆண்டுகளுக்கும் மேலான பிரான்ஸ் இராணுவ ஈடுபாட்டின் முடிவையும், ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியையும் குறிக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றாலும், சில மேற்கத்திய நாடுகள் நிதி, சட்டம் ,இராணுவ வழிமுறைகள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில், குறிப்பாக நிதி, எரிசக்தி, கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ந்து தலையிடுகின்றன. இந்த “புதிய காலனித்துவம்” ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும் செழிப்பையும் தடுத்து நிறுத்தியுள்ளது.
Trending
- புது வருட விபத்தில் 80 பேர் பாதிப்பு
- சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பொலிஸில் புகார்
- போயிங்கிடம் இருந்து விமானங்கள் வாங்கக் கூடாது சீன அரசு உத்தரவு
- உலகில் முதல்முறையாக விந்தணு ஓட்டப் பந்தயம்
- சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு புதிய திட்டம் அறிமுகம்
- பண்டிகைக் கால விபத்துக்கள் – 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடம் 5 கோடி ரூபா கேட்கிறார் இளையராஜா