டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமும், , அமெரிக்க அரசியல்வாதிகளும் கொடுக்கும் அழுத்தத்தால் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாஸா கையில் எடுத்துள்ளது. சீனா தனது சொந்த விண்வெளி திட்டத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சந்திரனுக்கு அனுப்பப்படும் முதல் விண்வெளி வீரர்கள், சீனாவுடனான விண்வெளிப் பந்தயத்தில் வெற்றி பெறுவது “நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது” என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
சந்திரனைச் சுற்றி சுற்றும் பணி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கப்படும் , 2027 ஆம் ஆண்டில் சந்திர மேற்பரப்பில் ஒரு குழுவினரை தரையிறக்கும் திட்டம்
1972 ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு மனிதர்கள் சந்திரனைச் சுற்றி வருவது இதுவே முதல் முறை.
2022 ஆம் ஆண்டில் மனிதர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட சோதனை விமானத்தின் விளைவாக, பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது காப்ஸ்யூலைப் பாதுகாக்கும் வெப்பக் கவசத்தில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதால், நாஸா ஏவுதலை தாமதப்படுத்தியது.
1960களில், விண்வெளிப் போட்டி சோவியத் யூனியனுடன் இருந்தது. அதில் அமெரிக்கா வெற்றி பெற்றது, முதலில் கொடியை நட்டது. இப்போது அமெரிக்காவுகுப் போட்டியாக சீனா உள்ளது.
நிலவின் மறுபக்கத்தில் விண்கலத்தை தரையிறக்குவதில் சீனா ஏற்கனவே அமெரிக்காவை முந்தியுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் டைகோனாட்களை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது.
வரும் நூற்றாண்டில் சீனா சந்திரனில் குறிப்பிடத்தக்க இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அமெரிக்காவும் இந்தியாவும், ஒருவேளை ஐரோப்பாவும் இதேபோன்ற ஒன்றைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.