தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜேவிபியே கற்றுக் கொடுத்தது என கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர்.
எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது.
தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
Trending
- இன்ஸ்டாவில் புதிய கட்டுப்பாடு
- சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
- தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பு
- சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்
- யாழில் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது
- செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள்
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
- 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபா வருமானம் சீவலி அருங்கொட