உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலன்களை கருத்தில் கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ர் ஜனாதிபதி ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அப்பாவித்தனத்தை புட்டின் கவனத்தில் கொள்ள வேண்டு. அந்த குழந்தைகள் “புவிசார் அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்றும் கடிதத்தில், மெலனியா ட்ரம்ப், குறிப்பிட்டுள்ளார்.
“ஒரே ஒரு எழுதுகோல் அசைவில் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். இது ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சேவை செய்வதாக இருக்கும்” என்று புட்டினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.