மெக்சிகோ நகரில் புதன்கிழமை எரிவாயு காஸ் டாங்கர் வெடித்ததில் ஐம்பத்தேழு பேர் காயமடைந்தனர், அவர்களில் 19 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்து கான்கார்டியா பாலத்தின் கீழ் உள்ள ஜராகோசா சாலையில் நிகழ்ந்ததாக மெக்சிகன் தலைநகரின் அரசாங்கத் தலைவர் கிளாரா ப்ருகாடா மோலினா சமூக ஊடக தளமான X இல் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:20 மணியளவில் 49,500 லிற்றர் கொள்ளளவு கொண்ட டாங்கர் கவிழ்ந்ததாகவும், காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த விபத்தில் 18 வாகனங்கள் சேதமடைந்தன, மேலும் காயமடைந்தவர்களில் 19 பேர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.