வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர்களைக் கைது செய்த கடற்படை அவர்களுடைய படகையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .