கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மே 21 முதல் மே 23 வரை ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பான பல முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் திணைக்கள அலுவலகங்களுக்குப் பொருந்தும்.இந்தக் காலகட்டத்தில் பின்வரும் EPF தொடர்பான சேவைகள் நடைபெறாது.
– EPF முழுப் பலன்களையும் செலுத்துதல் (K விண்ணப்பங்கள்)
– இறந்த உறுப்பினர்களுக்கான EPF சலுகைகள் (L விண்ணப்பங்கள்) செலுத்துதல்
– EPF 30% திரும்பப் பெறுதல் செலுத்துதல்
– AH பதிவுகள்
– புதிய நிறுவனங்களின் பதிவு
– பி அட்டைகளில் திருத்தம் ஆகியன நடைபெறாது.
வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கியதும், 011 2201201 என்ற துரித எண் மூலம் இந்த சேவைகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தொழில் திணைக்களம் கூறியுள்ளது.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் பதற்றம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்