கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மே 21 முதல் மே 23 வரை ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பான பல முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் திணைக்கள அலுவலகங்களுக்குப் பொருந்தும்.இந்தக் காலகட்டத்தில் பின்வரும் EPF தொடர்பான சேவைகள் நடைபெறாது.
– EPF முழுப் பலன்களையும் செலுத்துதல் (K விண்ணப்பங்கள்)
– இறந்த உறுப்பினர்களுக்கான EPF சலுகைகள் (L விண்ணப்பங்கள்) செலுத்துதல்
– EPF 30% திரும்பப் பெறுதல் செலுத்துதல்
– AH பதிவுகள்
– புதிய நிறுவனங்களின் பதிவு
– பி அட்டைகளில் திருத்தம் ஆகியன நடைபெறாது.
வழக்கமான பணிகள் மீண்டும் தொடங்கியதும், 011 2201201 என்ற துரித எண் மூலம் இந்த சேவைகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தொழில் திணைக்களம் கூறியுள்ளது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!