இஸ்ரேலுடன் இணைந்து,அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஃபோர்டோ, நடான்ஸ் , இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசித் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
டெல் அவிவ், ஹைஃபா , பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் இரண்டு தொகுதிகளாக 27 ஏவுகணைகளை ஏவியது.
தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் உடன் தொடங்கிய மோதல், இரு நாடுகளுக்கும் இடையிலான வெளிப்படையான போராக பரிணமித்துள்ளது.