சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஆயுர்வேதத் துறை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (Sவ்ச்ச்) ஆகியன இணைந்து ஜூன் 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் காலை 9:30 மணி வரை இலங்கையில் சர்வதேச யோகா தின (IDY) கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்தன.
இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள கற்பித்தல் ,ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட 113 ஆயுர்வேத மருத்துவமனைகளிலும், நான்கு பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி சுகாதார , வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் ,இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து “ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கான யோகா” எனும் தொனிப் பொருளில் யோகா தின பயிற்சி நேற்று வியாழக்கிழமை (19) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபிலின் வழிகாட்டலின் கீழ், திருகோணமலை கோபாலபுரம் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் தலைமையில், கோபாலபுரம் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் யோகா தினம் இடம்பெற்றது.
